தமிழ் முற்போக்கு கூட்டணி – முதலாளிமார் சம்மேளனம் இன்று பேச்சு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு குறித்து இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி, முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது.

கடந்த 28ஆம் திகதி அலரிமாளிகையில் செய்துக் கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த முதலாம் திகதி தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியது.

இதற்கமைய, கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக வர்த்தமானியில் பிரசுரிக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435