திட்டமிட்டபடி அடையாள வேலைநிறுத்தம்

நாடுபூராவும் உள்ள அரச வைத்தியசாலைகளில் திட்டமிட்டபடி அடையாள வேலைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் செயலாளர் நளீன் டி சொய்சா கருத்து தெரிவிக்கையில் இன்று காலை 8.00 மணி தொடக்கம் 12.00 மணி வரையான 4 மணி நேரம் வேலை நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இவ்வேலை நிறுத்தத்தில் அரச வைத்தி அதிகாரிகள் சங்கம், வாய் சுகாதார அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம் ஆகியன இணைந்துள்ளன என்றும் தெரிவித்தார்.

மாலபே தனியார் வைத்தியசாலை பட்டதாரிகளை வைத்தியர்கள் சபையில் பதிவு செய்வதற்கு சுகாதார அமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சு என்பன முன்னெடுக்கும் வேலைத்திட்டம், மாணவர் தடை, அரசினால் கைச்சாத்திடப்படவுள்ள எட்கா ஒப்பந்தம் போன்ற பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435