தேசிய பாதுகாப்புக்கு பங்களிக்கவுள்ள திணைக்களங்கள்

இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகழ்வு திணைக்களம் என்பவற்றை தேசிய பாதுகாப்புக்கு பயன்படுத்திக்கொள்ள பாதுகாப்புச்சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சுங்கம் மற்றும் குடிவரவு குடியகழ்வு பிரிவுகள் கடமைபுரிவது மிகவும் அவசியம். அதற்கமைய இந்நாட்டு தேசிய பாதுகாப்புத் தொடர்பான புதிய பொறுப்புக்களை பகிர்ந்தளிப்பது தொடர்பில் பாதுகாப்புச்சபை கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய குற்றவாளிகளை அடையாளங்காணுதல், அவர்கள் சட்டவிரோதமாக வௌிநாடு செல்வதை தடுத்தல், ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத பொருட்களை நாட்டுக்கு கொண்டு வருவதை தவிர்த்தல் போன்ற பொறுப்புக்கள் எதிர்காலங்களில் குறித்த பிரிவுகளுக்கு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435