தொடரும் மின்சாரசபை ஊழியர் போராட்டம்

சம்பளக்கொடுப்பனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க அதிகாரிகள் தவறியுள்ளனர் என்றும் கூறி இலங்கை மின்சாரசபை தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள மின்சாரசபை தலைமையகத்தில் இவ்வெதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்க தவறும்பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சாரசபை முகாமையாளர், மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435