தொடரூந்து தொழில்நுட்ப துறையினர் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கை

தொடருந்து தொழிநுட்ப அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தொடரூந்து தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகளின் சங்கத்தின் பிரதான செயலாளர் டபிள்யூ. பீ.எஸ். கமல் பீரிஸ் இந்;த அறிவித்தலை விடுத்துள்ளார்.

40 மணிநேர பணி மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவு உட்பட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தமது பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தியபோதும், தற்போதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டம் காரணமாக தொடரூந்து சேவைகளில் தாமதம் ஏற்படுவதுடன், தொடரூந்து சேவைகள் இரத்தாகும் நிலமைகள் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435