தொல்பொருள் திணைக்களத்தில் வெற்றிடங்கள்

தொல்பொருள் திணைக்களத்தில் தற்போது நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அத்திணைக்கள பதில் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பி.பி மண்டாவல தெரிவித்துள்ளார்.

மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக பொது முகாமைத்துவ திணைக்களத்துடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ள அவர், உடனடியாக நிரப்பும் வகையில் 8 பணிப்பாளர்கள், 29 உதவிப்பணிப்பாளர் வெற்றிடங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஒரு பணிப்பாளரும் 3 உதவிப் பணிப்பாளர்களுமே கடமையாற்றுகின்றனர் என்று தெரிவித்துள்ள அவர், கடுமையான ஆளணி பற்றாக்குறையினால் கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றுவதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் அதனால் உடனடியாக ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435