தொழிற்சங்கத் தலைவர் பால தம்போ பெயரில் வீதி

தொழிலாளர்களுக்காக பல்வேறு பணிகளை ஆற்றிய தொழிற்சங்கத் தலைவர் பாலதம்போவை கௌரவப்படுத்தும் வகையில் சீ.எம்.யூ காரியாலயத்திற்கு செல்லும் வீதிக்கு அவருடைய பெயரைச் சூட்டப்படவுள்ளது.

எதிர்வரும் மே மாதம் தொடக்கம் குறித்த பாதையில் பெயர் நடைமுறைக்கு வரவுள்ளது.

இலங்கை வர்த்தக கைத்தொழில் மற்றும் பொது தொழிலாளார் சங்கத்தின் பொதுச் செயலாளராக 67 வருடங்கள் பணியாற்றியுள்ள பால தம்போ தொழிலாளர்களுக்காக பாரிய பணிகளை ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட பாலதம்போ லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த சட்டத்தரணியாகவும் தொழிற்சங்கவாதியாகவும் செயற்பட்டார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி காலமானார்

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435