தொழிற்சங்க சட்ட ஆலோசகர்கள் சந்திப்பு

தொழிற்சங்கங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் சட்டதரணிகளுக்கான சந்திப்பொன்று கடந்த வாரம் இடம்பெற்றது.

சொலிடாரிட்டி சென்ரர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பு கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், வேலையிழப்புகள் போன்றவை தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சட்ட செயற்பாடுகள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இரு மாதங்களுக்கொரு தடவை சந்திப்பது என்று  இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது,

இலங்கையின் முன்னணி தொழிற்சங்கங்கள் பலவற்றின் சட்டத்தரணிகள், சட்ட ஆலோசகர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435