தொழிற்சங்க நடவடிக்கையில் வங்கி ஊழியர்கள் சங்கம்

இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மக்கள் வங்கி கிளையின் தலைவர், உப தலைவர் மற்றும் செயலாளர் உட்பட 7 பேருக்கு பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் தொழிற்சங்க நடவடிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் வங்கி முகாமை தொழிற்சங்க தலைவர்களுக்கு இவ்வாறு இப்பணித்தடை விதித்துள்ளதாக இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உப தலைவர் கேசர கோட்டேகொட விதான எமது சகோதர மொழி இணையதளமான வெடபிமவிற்று தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு கூட்டமொன்றை நடத்துவதாக அறிவித்து இவ்வாறு பணித்தடை விதித்துள்ளனர். இதனூடாக வங்கிக்குள் தனி மனித உரிமை மீறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று கொழும்பிலுள்ள மக்கள் வங்கி தலைமையலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இதேவேளை தொழிற்சங்க நிறைவேற்று குழுக்கூட்டத்தின் பின்னர் மேலதிக தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

peoples' bank 1

 வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435