தொழில்நாடி குவைத் சென்ற 41 பேர் நாடு திரும்பினர்

குவைத்துக்கு தொழிலுக்காக சென்றவர்களில் 12பெண்கள் உட்பட 41 பேர் இன்று நாடு திரும்பினர்.

குவைத்தில் உள்ள உணவு உற்பத்தி நிறுவனம் ஒன்றில் விநியோகப் பிரிவில் உந்துருளி செலுத்துநர் தொழிலுக்காக அவர்கள் கடந்த மாதம் 31 ஆம் திகதி குவதை் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த இலங்கையர்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்ற, அந்நாட்டு தொழில் முகவர்கள் சிலர், புதிய தங்குமிடத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்து அங்கிருந்து அவர்களை பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும், பேருந்தின் மூலம் குறித்த இலங்கையர்களை குவைத் சர்வதேச வானூர்தி தளத்திற்கு அழைத்துச் சென்ற அந்த அதிகாரிகள், அவர்களை பேருந்துந்திலிருந்து அங்கேயே இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரக காரியாலயத்திற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கண்டி முதலான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435