தொழில் வழங்கும் திட்டத்தில் தகுதிபெற்ற பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு

அரசாங்கத்தினால் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியல் இன்று பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நியமனக்கடிதம் கிடைக்கப்பெற்று 3 நாட்களுக்குள் அவர்கள் தமது பிரதேச செயலாளர் பிரிவிற்கு சமூகமளிக்க வேண்டும் என்று நியமனக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டடிருந்த போதிலும் நியமனக்கடிதம் கிடைக்கப்பெறாதோர் இது தொடர்பில் எந்தவித சந்தேகத்தையும் ஏற்படுத்திக்கொள்ளத்தேவையில்ல.

கடிதம் கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்கு பயிற்சிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் இது தற்பொழுது நடைமுறையில் இல்லை.

தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய பொது தேர்தல் நிறைவடைந்து 5 நாட்களுக்கு பின்னர் பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களின் முழுமையான பெயர்ப்பட்டியலை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் http://pubad.gov.lk என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435