நிறைவுக்கு வந்தது ரயிவே வேலைநிறுத்தப் போராட்டம்

இலங்கை ரயில்வே திணைக்கள ஊழியர்கள் கடந்த 7 நாட்களாக மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தப்போராட்டம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான அமைச்சரவை உபகுழுவுடன் இன்று காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது.

ரயில்வே திணைக்கள தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கான தீர்வு தொடர்பில் எழுத்து மூலமான உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரகாலமாக ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தை மேற்கொள்ளப்பட்டதையடுத்து அவர்கள் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு பேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவை நேற்று நியமித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435