நிறைவேற்று அதிகாரிகளுக்கான விசேட கொடுப்பனவு தற்காலிகமாக இடைநிறுத்தம்

அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவை வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.எட்டியாராச்சியினால் சுற்றறிக்கை ஊடாக இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு, தர நிலமைகளுக்கு அமைய, கடந்த முதலாம் திகதி முதல் விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவை வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435