நேற்று 11 பேருக்கு கொரோனா

நாட்டில் 11 பேருக்கு நேற்று (27) கொவிட் 19 தொற்று உறுதியானது.

சென்னையிலிருந்து வந்திருந்த 6 இந்தியர்களுக்கும், சென்னையில நாடு திரும்பிய 8 பேருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பி ஒருவருக்கும், பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களாவர்.

நாட்டில் கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,360 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 தொற்றினால் பீடிக்கபபட்டிருந்த மேலும் 22 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

இதற்கமைய தொற்றுறுதியான 3,208 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

139 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435