பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம்- ஆளுநர் உறுதி

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி இளமாணி பட்டங்களை பூர்த்தி செய்த சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் விரைவில் நியமனம் வழங்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி இளமாணி பட்டங்களை பூர்த்திசெய்த பட்டதாரிகள் அண்மையில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்கவை மாகாண சபையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தனர்.

இதன்போது, அவர்களிடம் கருத்து தெரிவித்தபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி இளமாணி பட்டங்களை பூர்த்தி செய்த சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி. கேகாலை மாவட்டங்களில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்.

இது குநித்து சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு முழுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது என்றும் மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435