பட்டதாரிகள் 494 பேருக்கு ஆசிரியர் நியமனம்

மேல் மாகாணத்தில் 494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தாமரைத் தடாகம் அரங்கில் நடைபெறவுள்ளது.

2014, 2016, 2017 ஆகிய வருடங்களில் நடைபெற்ற போட்டிப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்றவர்களுக்கே நியமனங்கள் இன்று நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

வர்த்தக பிரிவு பாடங்களுக்காக 147 பேருக்கும், கலை பிரிவு பாடங்களுக்கு 75 பேருக்கும், விஞ்ஞான பிரிவு பாடங்களுக்கு 65 பேருக்கும், மேற்கத்தீய சங்கீதம் மற்றும் நடன விடயங்களுக்கு 6 பேருக்கும், சித்திரத்திற்கு 4 பேருக்கும் கணித பிரிவில் 67 பேருக்கும், தகவல் தொழில்நுட்ப பாடநெறிகளுக்கு 16 பேருக்கும் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. மேலும் தமிழ் மொழி மூல பட்டதாரிகள் 81 பேரும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435