பட்டதாரி, டிப்ளோமாதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு

நடன ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சையில் தோற்றி தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 15ம் 16ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

பொது மற்றும் செயன்முறை தேர்வுகளினூடாக பட்டதாரிகளும் டிப்ளோமாதாரிகளும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வட மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் நடன ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 18ம் திகதி வர்த்தமானியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. விண்ணப்பம் அனுப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லையின் இறுதி வாரத்தில் திறந்த போட்டிப்பரீட்சையாக அறிவிக்கப்பட்டதையடுத்து நாட்டின் ஏனைய மாகாண பட்டதாரிகளும் டிப்ளோமாதாரிகளும் விண்ணப்பித்து பரீட்சையில்  தோற்றினர்.

எதிர்வரும் 15ம் திகதி நடத்தப்படவுள்ள நேர்முகத்தேர்வில் ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435