பட்டதாரி பயிலுநர் நியமிப்பு- போராட்டத்தில் மட்டு பட்டதாரிகள்

HNDA, மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் பட்டதாரி பயிலுனர் நியமனத்தினுள் புறக்கணிக்கபட்டமையை கண்டித்து நாளை (27) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது

பிரிப்பினையை கைவிட்டு அனைத்து பட்டதாரிகளுக்கும் இந்த வருடத்திற்குள் நியமனம் வழங்க வலியுறுத்தியும் #மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம், முற்போக்கு தமிழர் அமைப்பு ஆகியவற்றின் ஒழுங்குபடுத்தலில், பாராளுமன்ற உறுப்பினர் அமல் தலைமையில் இப்போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்போராட்டத்தின் போது தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சில் நாளைமறுதினம் (29) குறித்த பிரச்சனை சம்பந்தமாக மகஜர் ஒன்றும் கையளிப்பதற்காக பட்டதாரிகளது கையெழுத்தும் பெறப்படவுள்ளதால் மட்டக்களப்பிலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் கலந்துகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435