புதிதாக நியமனம் பெற்ற ஊழியர்களுக்கு இடமாற்றம் இல்லை

சுகாதார சேவைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்படும் ஊழியர்களுக்கு இரு வருடங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படாது என்று சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்தியர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமனம் பெற்ற சிலர் இடமாற்றம் வழங்குமாறு முறைப்பாடு செய்துள்ளமையை கருத்திற்கொண்டு, சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சின் தொழிற்சங்ககளின் பிரச்சினைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நியமனக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி, அனுமதிக்கப்பட்ட காலப்பகுதியில், நியமனம் கிடைத்த பிரதேசத்தில் தமது கடமையை முன்னெடுக்க வேண்டும். நியாயமான காரணங்களுக்கு மட்டுமே இடமாற்றம் வழங்கப்படும். சுகாதார முகாமைத்துவ உதவி அதிகாரி, தகவல் தொழில்நுட்ப அதிகாரி ஆகிய பதவிகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435