புதிய தொழில் ஆணையாளர் நாயகம் நியமனம்

புதிய தொழில் ஆணையாளர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தொழில் ஆணையாளர் நாயகமாக பதவியேற்கும் முன்னர் கரையோர பாதுகாப்பு பணிப்பாளர் நாயகமாக பணியாற்றி வந்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரியான பிரபாத் சந்திரகீர்த்தி, பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் சிரேஷ்ட உதவி செயலாளராகவும், பியகம பிரதேச செயலாளராகவும் ஊவா மாகாணசபை கல்வியமைச்சின் உதவி செயலாளராகவும் கடமை புரிந்துள்ளார்.

பதுளை, ஸ்பிரின்வெலி மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும் பதுளை மத்திய மகாவித்தியாலயம் மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றில் உயர்கல்வியையும் பயின்ற பிரபாத் சந்திரகீர்த்தி, ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பை பூர்த்தி செய்துள்ள அவர், திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார். ரஷ்யாயில் அடிப்படை கல்வி குறித்த சர்வதேச பல்கலைக்கழகத்தில் கலாநிதி கற்கையை பூர்த்தி செய்துள்ளார்.

ட்ரான்ஸ்பேரன்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தினால் வழங்கப்படும் விருதினையும் இவர் பெற்றுள்ளார்.

புதிய தொழில் ஆணையாளர் எதிர்வரும் 19ம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435