பொறியியல் டிப்ளோமாதாரிகளின் போராட்டம் 3 ஆவது நாளாகவும் தொடர்கிறது

நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகளின் போராட்டம் இன்று (10) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமது சேவைத்தரம் குறைக்கப்பட்டமை மற்றும் வரப்பிரசாரங்கள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகள், நேற்று முன்தினம் (08) போராட்டத்தை ஆரம்பித்தனர்.

தமது பதவியை தரம் குறைப்பு செய்வதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாட்டினால் தாம் பாதிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகளின் சங்கம் தெரிவித்தது.

அத்துடன், மேலதிக சேவை நேரம் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்குத் தொடர்பில்லாத பணிகளில் பணியாற்ற முடியாது என்று தெரிவித்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகளின் சங்கத் தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.

எனினும், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், நீர் வழங்கல் பணிகள் எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை என தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435