பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு

இலங்கை பொலிஸ் சேவையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் விசேட கொடுப்பனவை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

அவர்களுடைய வேலைநாட்களில் 20 நாளுக்கான கொடுப்பனவு சம்பளத்திற்கு மேலதிகமாக வழங்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ விக்கரமசிங்க ஆகியோருக்கு இடையில் பல மாதங்களாக இடம்பெற்றுவந்த பேச்சுவார்த்தைக்கமைய இக்கொடுப்பனவு வழங்கப்படுவதாக திரைசேரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய, பொலிஸ் அதிகாரிகளுக்கு மாதாந்தம் 14,000 ரூபா தொடக்கம் 20,000 ரூபா வரையில் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதுவரையில் பொலிஸ் பிரிவுக்கு வௌியே பணியாற்றிய அதிகாரிகளுக்கு மட்டுமே கொடுப்பனவு வழங்கப்பட்டன. இனி வரும் காலங்களில் அனைத்து அதிகாரிகளுக்கும் இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

பொலிஸ் சேவையில் தற்போது சுமார் 75,000 பேர் வரை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435