மக்கள் வங்கி கடன் அறவிடலை தற்காலிகமாக நிறுத்த -CTSU

மக்கள் வங்கியில் (People’s bank) இல் 10 இலட்சத்தினை விட அதிகமாக கடன் பெற்ற ஆசிரியர்கள் மாதாந்த சம்பளத்தை அறவிட வேண்டாம் என வேண்டுகோள் கடிதத்தை கையளிப்பதன் ஊடாக கடன் அறவிடலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அறிவித்துள்ளது.

உங்கள் வங்கி முகாமையாளரி இக்கடிதத்தை சமர்ப்பிதன் மூலமாக உங்களுடைய சம்பளம் முழுவதையும் வைப்பில் இடும் படியும் மாதாந்த கடன் அறவீடுகளை சம்பளத்திலிருந்து மீளப்பெற வேண்டாம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடுவதனூடாக உங்கள் சம்பளத்தை இந்த சுகாதார அவசரகால நிலையில் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும் என்று அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

வடமாகாணம் முழுவதிலும் உள்ள கிளைகள் இக்கருத்தில் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளன. தற்போது உலகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையின் பொருட்டு அநேக ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (CTSU ) மேற்கொண்ட முயற்சியின் பயனாக ஆசிரியர்கள் இந்நன்மையை பெற்றுக்கொண்டுள்ளனர் என்று வவுனியா மாவட்ட ஆசிரியர் பிரதிநிதி S.சிவகாரன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435