மரம் முறிந்து வீழ்ந்ததில் தோட்டத் தொழிலாளர் இருவர் பலி!

பலாங்கொடை – பின்னவல – வளவ தோட்டம் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் பலியாகினர்.

அத்துடன், காயமடைந்த மற்றுமொரு பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூன்று பெண்கள் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறு மரம் முறிந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளத.

அப்பகுதியில் நேற்று (14) காலை வீசிய பலத்த காற்றினால் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது தேயிலை பறித்துக் கொண்டிருந்த 3 பெண் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

காயங்களுக்குள்ளான பெண்ணொருவர், பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குறித்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

45 மற்றும் 43 வயதான இரு பெண்களே மரம் முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435