மாகம்புர துறைமுக பணியாளர்கள்  போராட்டம்

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக பணியாளர்களால், ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் எதிர்ப்பு போராட்டமொன்றில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

துறைமுகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பணியாளர்களே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை துறைமுக அதிகார சபைக்குள் தம்மை உள்வாங்க வேண்டும் அல்லது 5 மில்லியன் ரூபா நட்டஈட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரியே அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர், கோரிக்கை கடிதமொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்துக்குள் சென்றுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435