மாவனல்ல ஆதார வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

மாவனல்ல ஆதார வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

அவ்வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியின் தேவையற்ற கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இப்பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (11) காலை 6.30 மணிக்கு பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் மாவனல்லை கிளைத் தலைவர் லக்சிறி சமிந்த தெரிவித்தார்.

சிற்றூழியர்களின் கடமை பொறுப்புக்களை தாதியருக்கு குறித்த வைத்திய அதிகாரி வழங்கியுள்ளதாகவும் லக்சிறி சமிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த குறித்த வைத்திய அதிகாரி கனிஷ்ட ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தான் தெளிவுபடுத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435