மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 103 பேருக்கு கொரோனா

மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 103 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களாவர். ஏனைய 101 பேர் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடையவர்களாவர என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் இதுவரையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,186 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,628 ஆக அதிகரித்துள்ளது.

3,306 பேர் குணமடைந்துள்ளனர்.

1,309 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435