மீண்டும் களத்தில் குதிக்கும் வடக்கு வேலையற்ற பட்டதாரிகள்

தமக்கான நிரந்தர நியமனமத்தை வலியுறுத்தி வடக்கு பட்டதாரிகள் நாளை (15) கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.

தொடர்ந்து 145 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் பலனாக பயிற்சியடிப்படையில் பட்டதாரிகளை அபிவிருத்தி உதவியாளர்களாக இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும் இன்னமும் நியமனம் வழங்கப்படாமையினால் இக்கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தெரிவித்துள்ளது.

இவ்வருட இறுதிக்குள் நியமனம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்ட்ட போதிலும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள வடக்கு பட்டதாரிகள் சமூகம், இதனால் தாம் மீண்டும் போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின் நிறைவில் பட்டதாரிகள் கையெழுத்திட்ட மகஜர்களை வடக்கு முதலமைச்சர், ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபர்களினூடாக ஜனாதிபதிப் பார்வைக்கு அனுப்புவதற்காக கையளிக்கப்படும் என்றும் போராட்டத்திற்கு வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டு தமது பெயர் விபரங்களை பதிவு செய்யுமாறும் வடக்கு பட்டதாரிகள் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435