மீனவர்களுக்கு காலநிலை குறித்த தகவல்- அமைச்சு நடவடிக்கை

சிறிய மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு காலநிலை தொடர்பாக குறுஞ்செய்தி வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை மீன்பிடி அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் அடிப்படையில், கடலுக்கு மீன்பிடிக்காக செல்லும் சிறிய மீன்பிடிப் படகுகள் காலநிலை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு இந்த குறுஞ்செய்திகள் மிகவும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்று வீசும் திசை, கடல் கொந்தளிப்பு உள்ள தினங்கள், சீரற்ற காலநிலை, அடைமழை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே மீனவர்களுக்கு அனுப்பி வைக்க இந்தக் குறுஞ்செய்திச் சேவை பயன்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக கொழும்பு, காலி கரையோரப் பகுதிகளில் உள்ள மீன்பிடிப் படகுகளுக்கு இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தச் சேவை நாட்டின் ஏனைய கரையோரப் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்படுகிறது.

நன்றி- அரசாங்க தகவல் திணைக்களம்

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435