முச்சக்கர வண்டிச் சாரதிகளின் வயதெல்லை தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

முச்சக்கர வண்டிச் சாரதிகளின் குறைந்தபட்ச வயதெல்லையை 35ஆக மட்டுப்படுத்த அவசியமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே அவர் இந்தத் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தற்போது வயதெல்லை இன்றி சாரதிகள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முச்சக்கர வண்டிச் முச்சக்கர வண்டிச் சாரதிகளின் குறைந்தபட்ச வயதெல்லையை 35ஆக மட்டுப்படுத்த வேண்டும் என்ற யோசனை அரசாங்கத் தரப்பில் முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த யோசனையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லை 35 ஆக அதிகரிக்கும் யோசனைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த வயது எல்லை அதிகரிப்பானது அநீதியானதாகும்.

எனவே, குறித்த வயது எல்லையை ஆகக் குறைந்தது 25ஆக குறைக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தாம் கூறியதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியொன்றை செலுத்தி வாழும் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த நிலையில், முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் நிதி அமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435