மேலதிக ஐந்தாயிர தீபாவளி முற்பணத்திற்கு அனுமதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 5 ஆயிரம் ரூபாவை மேலதிகமாக வழங்குவதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த முறை 10 ஆயிரம் ரூபா தீபாவளி முற்பணக் கொடுப்பனவுக்கு மேலதிகமாக, 5 ஆயிரம் ரூபாவை தேயிலை சபையிலிருந்து வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

எனினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருப்பததாகவும், அதனால், மேலதிக தீபாவளி முற்பணக் கொடுப்பனவை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ் முற்போக்கு கூட்டணி கூறியிருந்தது.

இந்த நிலையில், குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணக் கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மூலம் – சூரியன்  செய்திகள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435