மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு

மேலும் 10,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்பை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (19) காலை இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தையடுத்து ஜனாதிபதி செயலகத்திலிருந்து வௌியேறும் போது அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பட்டதாரிகளை சந்தித்து இதனைத் தெரிவித்துள்ளார்.

நாம் அனைவருக்கும் தருவோம். அனைவருக்கும் கூறுங்கள். மேலும் பத்தாயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. “வெயிலில் காயாமல் வீடுகளுக்குச் செல்லுங்கள என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ஐம்பதாயிரம் வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் கடந்த 17ம் திகதி வௌியிடப்பட்டது. அதில் இடம்பெறாத பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435