மேலும் 204 பேர் அரச சேவையில் இணைவு

வட மத்திய மாகாணத்தில் காணப்பட்ட பல்வேறு வெற்றிடங்களுக்கு தகுதியுடைய 207 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் மாகாணசபை கேட்போர் கூடத்தில் நேற்று (19) இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது முகாமைத்துவ உதவியாளர்களாக 71 பேருக்கும் விவசாய ஆலோசகர்களாக 43 பேருக்கும் கால்நடை அபிவிருத்தி ஆலோசகர்களாக 26 பேருக்கும் விவசாய விரிவாக்க அதிகாரிகளாக 29 பேருக்கும் ஆசிரியர் சேவை தரம் 3 இற்கு 27 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நியமனங்கள் பெற்ற அனைவரும் ஏற்கனவே நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் அதியுயர் புள்ளிகளை பெற்றவர்களுக்கே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர் நியமனம் பெற்ற 27 பேரும் பௌத்த தர்ம பரீட்சையில் சித்தியடைந்தவர்களாவர்.

இந்நிகழ்வில் மாகாண பிரதான செயலாளர் எச்.எம்.பி. பண்டார, ஆளுநரின் செயலாளர் எ.கே.என்.விக்கிரமசிங்க உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435