மேல் மாகாண ஆசிரியர்களுக்கு இடமாற்றம் கிடையாது

மேல் மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு எந்த காரணத்தை கொண்டும் கட்டாய பணிக்காலத்திற்கு முன் இடமாற்றம் வழங்கப்படாது என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 306 பட்டதாரிகளுக்கு நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நியமனம் பெறும் வரையில் போராட்டங்களை மேற்கொள்ளும் பட்டதாரிகள் அதன் பின்னர் அவர்களின் வசதிக்கேற்ப நியமனங்களை மாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றனர். இது அநீதியான செயல். தத்தமது வீடுகளுக்கு அருகிலேயே உள்ள பாடசாலைகளுக்கு மாற்றல் கேட்கின்றனர். அதற்கு அரசியல்வாதிகளின் சிபாரிசுக்கடிதங்களை சமர்ப்பிக்கின்றனர். இது நடைமுறை சாத்தியமற்றது. சொந்த வசதிக்கேற்ப அரசாங்கம் நியமனம் வழங்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435