யட்டியாந்தோட்டையில் தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்

கேகாலை மாவட்டம் – யட்டியாந்தோட்டை – கனேபொல தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களான தமிழ் மக்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் (19) தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தாங்கள் மிகவும் அச்சமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் பிரபாகரனுக்கா வாக்களித்தோம்? சிங்களவர் ஒருவருக்கே வாக்களித்தோம். அவர்களுக்கு வாக்களித்து விட்டு அவர்களிடமிருந்து உதையும் வாங்குகின்றோம். எமது நிலை தொடர்பில் யாரும் கண்டுகொள்வதாக இல்லை’ என்றார்.

மதுபோதை காரணமாக, இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையே இந்த சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு தற்போது நிலமை சுமுகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தினால் நேற்றிரவு பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு நேர்ந்த துன்பம் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435