யாழ்ப்பாணத்தில் வேலையற்ற இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் யாழ்ப்பாணம் மாவடட செயலகமும் இணைந்து நடத்தும் தொழிற்சந்தை நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (08/02/2019) காலை 8.30 தொடக்கம் மாலை 2.30 வரை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற உள்ளது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள அனைத்து வெற்றிடங்களுக்கு் இதன்போது ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது

இதற்காக யாழ்ப்பாணம் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது

எனவே தொழில் வாய்ப்பை தேடி காத்திருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொழில் கல்வியினை பெற விரும்புபவர்களும் இந்த தொழில் சந்தையில் கலந்து கொள்வதன் ஊடாக அது தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் போது சம்பந்தப்பட்டவர்கள் நேர்முகத்தேர்வு ஒன்றில் பங்கேற்பதற்கான ஆவணங்களுடன் வருகை தருவது விரும்பத்தக்கது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தின் அரச மற்றும் தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கு கொள்வதுடன் , வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்குரிய ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன் தொழில் வாய்ப்புக்களும் ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435