யாழ் மாவட்டத்தில் மீளறிவித்தல் வரை ஊரடங்குசட்டம்

மீளறிவித்தல் வரை யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை (27) காலை வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் காலை 6.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது யாழ்ப்பாணத்தில் மீளறிவித்தல் வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையைக் கருத்திற்கொண்டு மீளறிவித்தல் வரை ஊரடங்குசட்டம் அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குசட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கமை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435