ரயில்வே பணியாளர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு சேவைக்கு திரும்புமாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.

உயர் கல்வி தடைதாண்டல் பரீட்சைக்குத் தோற்றும் பிள்ளைகளுக்கு ஏற்படும் உளரீதியான பாதிப்புகள் மிகுந்த கவனத்துடன் நோக்கப்படவேண்டும் என்பதால் தமது மனிதாபிமான பணியை பொறுப்புடன் நிறைவேற்றுமாறும் ஜனாதிபதி அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருப்பின் அவற்றை தீர்ப்பது குறித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தர முடியும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435