போக்குவரத்து அமைச்சுடன் ரயில் சங்கத்தினர் மாலை சந்திப்பு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் தொழிற்சங்கத்தினருக்கும் பதில் போக்குவரத்து அமைச்சர் அசோக் அபேசிங்கவுக்கும் இடையில் இன்று மாலை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தமது சம்பள பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடடுவதற்கு ரயில் தொழிற்சங்கத்தினர் கோரியதாக பதில் போக்குவரத்து அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல் மேற்கொண்டதன் பின்னர் இன்று மாலை வேளை, அவர்களுடன் சந்திப்பை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பள பிரச்சினையை முன்வைத்து கடந்த 24ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட ரயில் தொழிற்சங்க போராட்டம் இன்றும் தொடர்கிறது.

இந்த  பணிப்புறக்கணிப்பு காரணமாக தாங்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435