நள்ளிரவு முதல் ரயில் சேவை முடக்கம்

இன்று நள்ளிரவு தொடக்கம் 48 மணி ​நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் திணைக்கள தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பல சங்கங்கங்கள் இவ்வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.

குறித்த தரங்களில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரியே முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வேலைநிறுத்தத்தப்போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக ரயில் கட்டுப்பாட்டாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் பீ.எம்.டீ பீரி்ஸ் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435