வடக்கு ஆசிரியர் நியமனத்திற்கான நேர்முகத்தேர்வு ஜன 16 – 18 வரை

வடக்கில் நடைபெற்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 16,17, 18ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது என்று மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

நேர்முகத்தேர்வின் பின்னர் தகுதி பெற்ற அனைவரும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நியமனங்கள் வழங்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சைக்கு பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்கள்- சுமார்- 2780, தோற்றியவர்கள்- சுமார்- 2490. இரு பாடங்களிலும் 40% மேல் எடுத்து(நியமனத்து தகுதியானவர்கள்) சித்தியடைந்தவர்கள் 779 பேர் காணப்படும் மொத்த வெற்றிடம் 849 ஆகும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435