வடக்கு வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குமாறு  கோரிக்கை

வட மாகணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலை உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞானசீலன் குணசீலன் தெரிவித்துள்ளார்.

எனவே, குறித்த கொடுப்பணவுகளை வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டினை உடனடியாக மாகாண திறைசேரிக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர்,

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அவர்களுக்கான மேலதி நேர கொடுப்பனவுகளுக்கான வீதங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது.

எனினும், அதிகரிக்கப்பட்ட வீதத்தின் அடிப்படையில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் இது வரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

பழைய வீதத்திலேயே அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருந்தது.

மத்திய அரசிலிருந்து மாகாண திறைசேரிக்கு பழைய வீதத்திலான கொடுப்பனவுகள் வழங்குவதற்கே எமக்கு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருந்தது.

புதிய வீதத்தின் அடிப்படையில் மேலதிக கொடுப்பணவுகளை வழங்குவதாக இருந்தால் மொத்தமாக 280 மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக வடமாகாண வைத்திய அதிகாரிகள் சங்கம் என்னுடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது.

இது தொடர்பில் மாகாண திறைசேரி, பிரதம செயலாளர் மற்றும் பிரதி பிரதம செயலாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்த போதும் தற்போது மாகாண திறைசேரியிலிருந்து வழங்குவதற்கான நிதி மாகாண திறைசேரியிடம் இல்லையென்பதனால், மாகாண திறைசேரியினால் மத்திய நிதி அமைச்சிற்கு குறித்த விடயம் தெரியப்படுத்தப்பட்டு மத்திய திறைசேரியிடமிருந்து இதற்கான நிதியை ஒதுக்கித்தருமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதோடு, நேரடியாகவும் மாகாண பிரதி பிரதம நிதி செயலாளர் கொழும்பு சென்று இவ்விடையம் தொடர்பாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

நாங்களும் நிதியை பெற்றுக்கொள்ள தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்தோம். ஆனாலும் மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குவதற்கு நிதி இன்னும் எங்களுக்கு வழங்கப்படாமல் இருக்கின்றது.

ஆகவே நிதி அமைச்சிலிருந்து இதற்கான நிதியை பெற்று மாகாண திறைசேரியூடாக மேலதிக கொடுப்பனவை வழங்க வேண்டும். தொடர்ச்சியாக அதற்கான அழுத்தத்தை கொடுத்து வருகின்றோம்.

எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய சுகாதார அமைச்சருக்கும் மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது.

இதன் போது குறித்த விடையங்கள் அங்கே வழியுறுத்தி கூறப்படும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ஞானசீலன் குணசீலன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435