வடமாகாண சுகாதார தொழிலாளர் பணிப்பகிஷ்கரிப்பு!

யாழ் மாநகரசபையில் பணியாற்றிவரும் சுகாதார தொழிலாளர்கள் நிரந்த நியமனம் கோரி இன்று (07) பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பத்து வருடங்களுக்கு மேற்பட்ட காலம் பணியாற்றிவரும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க மாநாகரசபை தவறியுள்ளதாக சுட்டிக்காட்டி வடபிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இத்தொழிலார்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மாநகரசபைக்கு முன்பாக நடத்தப்படுகிறது.

ஐந்து மாதங்களுக்கு முன்னர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோது ஒரு மாதத்தில் தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளிக்கப்பட்டது. எனினும் இன்று வரையில் நியமனம் வழங்கப்படவில்லை. பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் பணியாற்றும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குவது அவசியம் என்று அத்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்மாநகரசபையில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிவரும் சுகாதார தொழிலாளர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்று காலை முதல் யாழ் மாநகரசபைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435