வட ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கான வயதெல்லை 45ஆக அதிகரிப்பு

வட மாகாணத்தில் காணப்படும் பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடத்தப்படும் போட்டிப்பரீட்சையில் தோற்றுவதற்கான வயதெல்லை 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அறிவித்துள்ளார்.

வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவை தரம் மூன்றுக்கு விண்ணப்பிப்பதற்கான வயதெல்லையே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்பி வைக்கப்பட வேண்டிய திகதி இம்மாதம் 18ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள விடயங்களை கவனத்திற்கொண்டு வட மாகாண பட்டதாரிகள் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435