வட மாகாண சபையை முற்றுகையிட்டு மாகாண தொண்டராசிரியர்கள் போராட்டம்

வடக்கு மாகாண சபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் அலுவலகங்களை முற்றுகையிட்டு வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்று போராட்;டத்தில் ஈடுபட்டனர்.

வட மாகாணத்தில் 646 பேர் தொண்டராசிரியர்களாக பணியாற்றிவரும் நிலையில் நேர்முகத் தேர்வு மூலம் 182 பேருக்கு மாத்திரம் நிரந்தர நியமனம் வழங்க தற்போது ஏற்பாடாகியுள்ளது.

இந்த நிலையிலேயே இன்று (27) அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வட மாகாணசபையின் அமர்வு இன்று இடம்பெற்றுவரும் நிலையில் அவர்கள் மாகாணசபை மற்றும் முதலமைச்சர் அலுவலகங்களின் கதவுகளில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், தமது நிபந்தனைகளை நிறைவேற்ற அனைத்து உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டராசியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435