வழங்கிய நியமனங்களை இடைநிறுத்த உத்தரவு

தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த பயிற்சித் திட்ட உதவியாளர் நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

7,500 பயிற்சித் திட்ட உதவியாளர்களை சேவையில் இணைக்கும் இத்திட்டமானது தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளரின் கையெழுத்திட்ட நியமனக்கடிதங்கள் கடந்த 16ம் திகதி தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் நாடு முழுவதும் உள்ள மாவட்டச் செயலகங்களில் இணைந்து பயிற்சியை மேற்கொள்ளவிருந்தனர்.

எனினும் நேற்று (24) அவர்கள் மாவட்டச் செயலகங்களுக்கு கடமையை பொறுப்பெடுக்கச் சென்றபோது அவர்களை சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என்று தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435