வீஸா இன்றி இலங்கையில் 7,010 வௌிநாட்டவர்கள்

செல்லுபடியான வீஸா இன்றி இலங்கையில் 7,010 பேர் தங்கியுள்ளனர் என்று தகவல் வௌியாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா வீஸாவினூடாக இலங்கைக்கு வருகைத்தந்து பல ஆண்டுகளாக தங்கியுள்ளனர் என்று பொலிஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பான அறிக்கையொன்றினை குடிவரவு குடியகழ்வு திணைக்களம் பொலிஸிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களை கைது செய்வதற்கான நாடு முழுவதும் நடத்தப்பட்ட 8 மணி நேர தேடுதல் நடவடிக்கையில் இதுவரை 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பதில் பொலிஸ் மாஅதிபர் சீ.டி.விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நேற்று (06) காலை 6.00 மணி தொடக்கம் இத்தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் 82 இந்தியர்களும் 12 பாகிஸ்தானியர்களும் 10 மாலைத்தீவு பிரஜைகளும் 8 நைஜீரிய பிரஜைகளும் 6 பங்களாதேஷ் பிரஜைகளும் 4 சீன பிரஜைகளும் 4கனடா பிரஜைகளும் 2 தாய்லாந்து பிரஜைகளும் 2 சுவிட்ஸர்லாந்து பிரஜைகளும் அமெரிக்கா, சுவீடன், ஆப்கானிஸ்தான், இஸ்ரேல் மற்றும் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒவ்வொருவர் வீதமும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இலங்கையில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கைது செய்யப்படும் வௌிநாட்டவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435