தொடரூந்து தொழில்நுட்ப பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து தொழில்நுட்ப பணியாளரகள் நேற்று (29) பிற்பகல் 4 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாளை பிற்பகல் நான்கு மணிவரை தொடரும் என தொடரூந்து தொழில்நுட்ப சேவை சங்கத்தின் தலைவர் சம்பத் ராஜித்த தெரிவித்துள்ளார்.

12.1 சதவீத வேதன உயர்வு, ஒரு நாளைக்கு எட்டு மணிநேர அடிப்படையில் வாரத்திற்கு 40 மணிநேர வேலை நேரம், 75 வீத ஊக்குவிப்பு கொடுப்பனவை நிரந்தரமாக்குதல் முதலான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முதல் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து பிரதி அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தொடரூந்து தொழில்நுட்ப சேவை சங்கத்தின் தலைவர் சம்பத் ராஜித்த தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பணிப்புறக்கணிப்பு காரணமாக தொடரூந்து சேவை தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய தொடரூந்து சேவையின் ஒப்பந்த மற்றும் மேலதிக பணியாளர்கள் கட்டாயமாக சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் தொழிற்சங்கங்களை அடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வார்களாயின், அடையாள பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடரூந்து தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில், பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டு பணிக்கு சமுகமளிக்குமாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடம் தாம் கோரிக்கை விடுப்பதாக தொடரூந்து முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435