வேலையில்லா பட்டதாரிகளின் மனிதச்சங்கிலி போராட்டம்

கிழக்கு வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் அரசின் நிலைப்பாடு குறித்த கலந்துரையாடலொன்று நேற்று (09) அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரிகள் மனிதச்சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

காரைத்தீவு சுற்றுவட்டத்திற்கருகில் இக்கலந்துரையாடலும் மனிதச்சங்கிலி போராட்டமும் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் அகில இலங்கை வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய தன்னே ஆனந்த தேரர், அம்பாறை மாவட்ட முஸ்லிம் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ. ஜசீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் அப்படியில்லாவிடின் தேர்தலை புறக்கணிப்பது என்றும் மாகாண மற்றும் மத்திய அரசுகள் தமக்கு சாதகமான தீர்வை பெற்றுத்தரவேண்டும் என்றும் அகில இலங்கை வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய ஆனந்த தேரர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435