வேலையில்லா பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கல் 20ம் திகதி ஆரம்பம்

வெட்டுப்புள்ளி பிரச்சினை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் வழங்கும் நடவடிக்கையை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 20ம் திகதி (திங்கட்கிழமை) நியமனங்களை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாவட்ட மட்டத்தில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிமுகப்படுத்திய வெட்டுப்புள்ளி அதிகரித்து காணப்பட்டமையின் காரணமாக நியமனம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

எது எவ்வாறு இருப்பினும் குறித்த அமைச்சானது தெரிவு செய்யப்பட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்களை தற்போது தயார் செய்து வருவதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435